தேர்வு நடப்பதற்கு முன்னரே கீ ஆன்சர் வெளியீடு -அலுவலர்கள் தற்காலிக பணிநீக்கம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தியதேர்வின் விடைகளை வெளியிடுவதில் நடந்த குழப்பம் தொடர்பாக இரண்டு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு நடத்திய பொறியியல் பணிகளுக்கான தேர்வின்விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. பொறியியல் பணி தேர்வு விடைகளுக்குப் பதிலாக, நடைபெறவிருந்த மற்றொரு தேர்வின் விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்டபிரிவின் துணைச் செயலாளர் மற்றும் பிரிவு அலுவலர் ஆகிய இருவரும்வெள்ளிக்கிழமை இரவு சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post