ஆசிரியர் பணி கலந்தாய்வுக்கு மணக்கோலத்தில் வந்த வாலிபர்


       திருமணம் முடிந்தவுடன், மனைவியுடன் வந்து, ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வில், வாலிபர் பங்கேற்றார்.
      சேலம் மாவட்டம், ஆத்துாரை சேர்ந்தவர் ஜெயபால், 30. இவருக்கும், ஆனந்தீஸ்வரி என்ற பெண்ணுக்கும், கோட்டை ஈஸ்வரன் கோவிலில், நேற்று திருமணம் நடந்தது. திருமணம் முடித்தவுடன், மனைவியை அழைத்து கொண்டு, சேலம், சிறுமலர் பள்ளியில் நடந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வில் பங்கேற்றார்.

மணக்கோலத்தில் வந்தவரை, அங்கிருந்தவர்கள், ஆச்சர்யத்துடன் பார்த்தனர். விழுப்புரம் மாவட்டம், பெரிய தச்சூர் பள்ளியில், பணிபுரிய நியமன ஆணை வழங்கப்பட்டது.

இதுகுறித்து, ஜெயபால் கூறியதாவது:கலந்தாய்வு பற்றி, 28ம் தேதி இரவு தான் தெரியும். திருமணம் முடிந்தவுடன், மனைவியை தனியாக விட்டு வருவதற்கு மனம் வரவில்லை. அதனால், கார் மூலம் கலந்தாய்வில் பங்கேற்றேன்.இவ்வாறு ஜெயபால் கூறினார்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post