'மெரிட்' அடிப்படையில் பதவி: மத்திய அரசு அதிரடி உத்தரவு

அனைத்து துறைகளிலும், முக்கிய பதவிகள் நியமனத்தில், 'மெரிட்' எனப்படும் தகுதி அடிப்படையிலான பட்டியலை பரிந்துரைக்குமாறு, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து, மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது: பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் கீழ் இயங்கும் அனைத்து துறைகளின் முக்கிய பதவிகள் நியமனத்தில், தகுதி வாய்ந்த நபர்களின் பட்டியல், 'அபாயின்மென்ட் கமிட்டி ஆப் கேபினட்' எனப்படும், ஏ.சி.சி.,க்கு பரிந்துரைக்கப்படுகிறது.
இதில், மெரிட் அடிப்படையிலான பட்டியல் பரிந்துரைக்கப்படாதது, தெரிய வந்துள்ளது. எனவே, பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் துறைகளின் இணைச் செயலர், வாரியத் தலைவர், இயக்குனர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளின் நியமனத்தின் போது, மெரிட் அடிப்படை பட்டியலை அனுப்புமாறு, அனைத்து துறைகளுக்கும் உத்தரவிடப்படுகிறது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post