மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுக் கட்டணம் அறிவிப்பு.



நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வாணையர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 
இணைந்த கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுநிலை பாடத்திட்ட தேர்வுகள் வரும் ஏப்ரல் 30ம் தேதி தொடங்குகிறது. 

தெரிவு நிலை பாடத்திட்டம் அல்லாத தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுகள் வரும் ஏப்ரல் 16-ம் தேதி தொடங்குகிறது.மாணவர்கள் தேர்வு கட்டணத்தை வரும் பிப்.26-ம் தேதி வரை அபராத கட்டணம் இல்லாமலும், மார்ச் 6-ம் தேதி வரை அபராத கட்டணத்துடன் செலுத்த வேண்டும். தனித்தேர்வுகள் எழுதும் மாணவர்கள் விண்பணபப்படிவத்தை தங்கள் பயின்ற கல்லூரி வாயிலாக அல்லது தேர்வாணையர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி-12, என்ற முகவரிக்கு சுய விலாசமிட்ட ரூ.10 தபால் தலை ஒட்டிய உறையை அனுப்பி பெற்றுக்கொள்ள வேண்டும்.

இணைக்கப்பட்ட கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை அதற்குரிய தேர்வு கட்டணத்தை பவர் ஜோதி இன் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எக்ஸாமினேஷன் பண்ட் அக்கவுண்ட் நம்பர் 32723644186-ல் செலுத்தி தேர்வாணையர் அலுவலகத்தில் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post