ராணுவ பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

இந்திய ராணுவத்தில், தொழில்நுட்பம் மற்றும் பொதுப் பணி வீரர்களுக்கான, எழுத்துத், தேர்விற்கான முடிவுகள், தமிழக அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ராணுவத்தில், தொழில்நுட்பம் மற்றும் பொதுப்பணி வீரர்கள் மற்றும், 'டிரேட்ஸ் மேன்' பணிகளுக்கான ஆட்கள் தேர்வு, புதுச்சேரியில், கடந்த ஜூலையில் நடந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள், இதில் பங்கேற்றனர்.

இதில், தேர்வு செய்யப்பட்ட, 516 பேருக்கு, ஆக., 31ம் தேதி சென்னை, ராணி மேரி கல்லுாரியில், எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதில், 79 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகள், தமிழக அரசின், 'www.tn.gov.in' என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வில் வெற்றி பெற்றவர்கள், வரும் 29ம் தேதி, அனைத்து உண்மை சான்றிதழ்களுடன், சென்னை கோட்டையில் உள்ள ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post