பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி கையேடு

அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் இம் மாதம் 29ம் தேதிக்குள் பயிற்சி கையேடு வழங்க உத்தர விடப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளை படித்து அதிக மதிப்பெண் பெறும் வகையில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட பயிற்சி கையேடு வழங்கப்படும். அதில் ஒவ்வொரு பாடத்திலும் எந்த பகுதி முக்கியமானது. அடிக்கடி கேட்கப்பட்ட வினாக்கள் உள்ளிட்ட தகவல்கள் இருக்கும்.

இந்த கையேடு அரசு பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலம் அனுப்பப்படும். இம் மாதம் 29ம் தேதிக்குள் மாணவர்களுக்கு வழங்கிவிட வேண்டும், என பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post