செய்திகள்கனமழை எதிரொலி: இந்த இடங்களில் மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!


கனமழை எதிரொலி காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கும், நீலகிரியில் 4 தாலுக்காக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை (வியாழக்கிழமை) விடுமுறை அளித்து முதல்வர் வி. நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

காரைக்கால்:

அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (வியாழக்கிழமை) விடுமுறை அளிப்பதாக, அம்மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா அறிவித்துள்ளார். 

நீலகிரி:

உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (வியாழக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ளார்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post