பள்ளிகள் இல்லாத கிராமம், முதன்முதலாக 10-வது தேர்ச்சி பெற்ற மாணவிகள்’ - நெகிழ்ந்து கொண்டாடிய மக்கள்!

ராஜஸ்தானிலுள்ள பத்லா கிராமத்தில், எஃகு தட்டுகளின்மீது எழுப்பப்படும் ஒலி, அங்குள்ள மணல் திட்டுகளின் வழியாகப் பரவி, ஒவ்வொரு வீட்டிலும் சென்றடைந்தது. அக்கிராமத்தில், குழந்தை பிறந்ததைக் குறிக்கும் விதமாக இந்த ஒலியை எழுப்புவது வழக்கம். ஆனால், கடந்த செவ்வாய்க்கிழமை இந்த ஒலி எழுப்பப்பட்டதுக்குக் காரணம் முற்றிலும் சுவாரஸ்யமானது.

கிராமத்தில் கல்வி பயிலும் மாணவர்கள்
கிராமத்தில் கல்வி பயிலும் மாணவர்கள்

ராஜஸ்தான் மாநிலத்தில், திறந்தநிலைப் பள்ளிகளின் தேர்வு முடிவு கடந்த திங்கள்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது. நமக்கு சாதாரணமான செய்தியாகத் தெரியும் இது, தூங்கிக் கொண்டிருந்த அந்தக் கிராமத்துக்கு கொண்டாடக்கூடிய இரவைத் தந்தது.

அமிரா, வச்சி மற்றும் ஹிரா பானு என இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சியடைய, அந்தச் செய்தியைத்தான் கொண்டாடித் தீர்த்துள்ளனர் கிராம மக்கள். கொண்டாட்டத்துக்குக் காரணம், மாணவர்கள் ஒருவர்கூட பள்ளியில் சேரவில்லை என்பதால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கிராமத்தில் இருந்த அனைத்து அரசுப் பள்ளிகளும் மூடப்பட்டன.

அதையும் தாண்டி, அக்கிராமத்திலேயே முதன்முறையாக பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் என்றால் அது இந்த மூன்று மாணவர்கள்தான். இதனால்தான் அந்தக் கிராமத்திலுள்ள அனைத்துக் குடும்பங்களும் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை இனிப்புகள் வழங்கி, மாணவிகளுக்கு மாலை அணிவித்து, விழாவைப்போல கொண்டாடிவருகின்றனர்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post