இனி குரூப் 4, 2 தேர்வு இரு கட்டங்களாக நடைபெறும், அனைத்து கேள்விக்கும் விடையளிக்க வேண்டும்: TNPSC அதிரடி


samayam-tamil
   
TNPSC Exam Pattern: இனி வரும் காலங்களில் குரூப் 4, குரூப் 2 தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும், அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும் என்று பல அதிரடி முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

விடைத்தாள் செல்லாது!

undefined

அவ்வாறு A,B,C,D மற்றும் E ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை குறிக்கத் தவறி விட்டால், அந்த விடைத்தாள் செல்லாதாக்கப்படும். எனவே, அனைத்து கேள்விக்கும் விடையளிக்க வேண்டும். தெரியாத கேள்வியை அப்படியே விட்டுவிடக் கூடாது. மாறாக E வட்டத்தை குறிக்க வேண்டும். மேலும், தேர்வர்களின் விவரங்கள் அடங்கிய பகுதி, விடையளிக்கும் பகுதி ஆகியவை தேர்வர்களின் முன்னிலையில் தனித்தனியாக பிரித்து வைத்து, தேர்வு அறையிலேயே சீல் வைக்கப்படும் அந்த உறை மீது தேர்வு அறையில் இருக்கும் மற்ற சில தேர்வர்களின் கையொப்பம் பெறப்படும்

TNPSC New Pattern

undefined

Tamil Nadu Public Service Commission (TNPSC) எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று (பிப்.15) செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, ‘டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் அவ்வபோது தனது தேர்வு முறைகளில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு ஆதார் கட்டாயம் உள்ளிட்ட முக்கிய மாற்றங்களை அறிவித்தது

TNPSC Group 4, Group 2A

undefined

இதன் அடுத்தக்கட்டமாக டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்த்திருத்தங்கள் பற்றி பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்வாணையக் குழுமம் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன் முக்கிய அம்சங்களை இங்கு காணலாம்.

1. இரண்டு கட்டங்களாக தேர்வு நடைபெறும் தொகுதி 4, தொகுதி 2 ஏ போன்ற தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடைபெறும். இதுவரையில் பொது அறிவுத்தாள் மட்டுமே கொண்ட ஒரு தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இனி அது முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். தேர்வர்கள் அதற்கு ஏற்றவாறு தங்களை தயார்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

​எல்லா கேள்விக்கும் விடையளிக்க வேண்டும்

undefined

எல்லா கேள்விக்கும் விடையளிக்க வேண்டும்

இனி வரும் காலங்களில் கொள்குறிவகைத் தேர்வுகளில் எல்லா கேள்விக்கும் விடையளிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு கேள்விக்கு விடை தெரியவில்லை என்றாலே் அதனை குறிப்பிடும் வகையில் E வட்டத்தை கருமையாக்க வேண்டும். மொத்தமுள்ள கேள்விகளுக்கு A,B,C,D மற்றும் E என்ற வகையில், எத்தனை விடைகளை நிரப்பியுள்ளார் என்ற விவரங்கள் தனியே பதிவு செய்து, அதற்கு உரிய கட்டங்களையும் நிரப்பப வேண்டும். இதற்காக தேர்வு முடிந்ததும் 15 நிமிடங்கள் கால அவகாசம் வழங்கப்படும்

விரல்ரேகை பதியப்படும்

undefined

தேர்வர்களின் பெயர் விவரங்களை அடையாளம் காண முடியாத வகையில், விடையளிக்கும் பகுதியில், அவர்களுடைய கையொப்பதற்கு பதிலாக, இடது கை விரல் ரேகை பதியப்படும்.

TNPSC: CCTV GPS Control Room

undefined

சிசிடிவி, ஜிபிஎஸ் கண்காணிப்பு வசதி:

தேர்வு அறையில் இருந்து எடுத்துச் செல்லப்படும் சீலிடப்பட்ட விடைத்தாள்கள், தேர்வாணைய அலுவலகத்துக்கு கொண்டு வரப்படும் வரையில் வாகனத்தை சிசிடிவி, ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும். இதற்காக பிரத்யேக கண்காணிப்பு கட்டுபாடு அறை டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் ஏற்படுத்தப்படும்.

TNPSC New Pattern and Latest Reforms 2020 Press Release

TNPSC New Pattern and Reforms 2020 Press Release

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post