ஈரோட்டில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

ஈரோடு: ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஜன., 10ம் தேதி நடக்க உள்ளது.
ஈரோடு, சூளையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அன்று காலை 10 மணிக்கு நடக்கும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று பல்வேறு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றன.
இம்முகாமில் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்ச்சி மற்றும் தோல்வி அடைந்த, ஐ.டி.ஐ., பிட்டர், டர்னர், மோட்டார் மெக்கானிக் உள்பட அனைத்து பிரிவுகள், இலகு ரக வாகன ஓட்டுனர்கள், டிப்ளமோ படித்தவர்கள், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்கள் மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நடக்கிறது.
தனியார் துறையில், இம்முகாம் மூலம் பணியமர்த்தம் செய்யப்படுவதால், தங்களது வேலைவாய்ப்பு பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.
எனவே, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் வேலையளிப்போர், இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி கவிதா கேட்டுக்கொண்டார்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post