சிறப்பு டி.இ.டி., தேர்வு: ஏப்ரல் 22க்குள் "ஹால் டிக்கெட்"

சென்னை: "சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (டி.இ.டி.,), ஹால் டிக்கெட் 22ம் தேதிக்குள், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) இணையதளத்தில் வெளியிடப்படும்" என அறிவிக்கப்பட்டு உள்ளது.
டி.ஆர்.பி., அறிவிப்பில், "மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு டி.இ.டி., தேர்வு, மே 21ம் தேதி 32 மாவட்ட தலைநகரங்களிலும் நடக்கும். தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட், டி.ஆர்.பி.,யின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், வரும் 22ம் தேதிக்குள் வெளியிடப்படும்" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முதலில் வரும் 28ம் தேதி தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தேர்தல் காரணமாக மே 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. தேர்வுக்கு, 5,300 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post