சென்னை பல்கலை இலவச கல்வி திட்டம்


சென்னை பல்கலை இலவச கல்வித் திட்டத்தில், இளங்கலை பயில விரும்பும் மாணவர்கள், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வந்த, 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம்.


இதுகுறித்த செய்திக் குறிப்பு:

இலவச கல்வித் திட்டத்தில், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில், சென்னை பல்கலையின் இணைப்பு பெற்ற, சுயநிதி கல்லூரிகளில் சேர, விண்ணப்பங்கள் அளிக்கலாம். இம்மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஆதரவற்ற, விவசாய மற்றும் கூலி வேலை செய்யும் பெற்றோரின் பிள்ளைகள், விதவை அல்லது கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் பிள்ளைகளுக்கு, திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் மாணவரின் குடும்ப வருமானம், இரண்டு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். விவரங்களும், விண்ணப்பமும். www.unom.ac.in இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, குறிப்பிட்ட சான்றிதழ்களுடன், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான, 15 நாட்களுக்குள், பல்கலை பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post