எழுத்துப்பிழை இல்லாமல்* *தமிழ் சொல்லி தர* *பிள்ளைகளுக்கு* *சில விளக்கங்கள்.

*எழுத்துப்பிழை இல்லாமல்* 
*தமிழ் சொல்லி தர* *பிள்ளைகளுக்கு*  
*சில விளக்கங்கள்...*
###############

 *"ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்?  ஒரு எளிய விளக்கம்*

*மூன்று சுழி “ண”, ரெண்டு சுழி “ன” மற்றும் "ந" என்ன வித்தியாசம்?*

*தமிழ் எழுத்துகளில் ரெண்டு சுழி "ன" என்பதும், மூன்று சுழி "ண"* *என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு.*

*"ண" இதன் பெயர் *டண்ணகரம்,*
*"ன"* *இதன் பெயர் றன்னகரம்,*
*"ந" இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி.*

*மண்டபம்,* *கொண்டாட்டம் – என எங்கெல்லாம்* *இந்த மூன்று சுழி "ணகர"* *ஒற்றெழுத்து வருதோ,* *அதையடுத்து வர்ர* *உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க* *எழுத்தாகத்தான் இருக்கும். இதனால* *இதுக்கு "டண்ணகரம்" னு பேரு.* *(சொல்லிப் பாருங்களேன்!)*

*தென்றல், சென்றான் – என* *எங்கெல்லாம் இந்த* *ரெண்டு சுழி "னகர"* *ஒற்றெழுத்து வருதோ*, *அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க* *எழுத்தாகத்தான் இருக்கும்.* *இதனால* *இதுக்கு *"றன்னகரம்" னு பேரு.*
*(சும்மா சொல்லிப்பாருங்க!)*

*இது ரெண்டும் என்றுமே மாறி வராது...*
*நினைவில் கொள்க...*

*மண்டபமா? மன்டபமா?* *சந்தேகம் வந்தா...*
*பக்கத்துல 'ட' இருக்கா,*
*அப்ப இங்க மூன்று சுழி 'ண்' தான் வரும்.*
*ஏன்னா அது "டண்ணகரம்"*.

*கொன்றானா? கொண்றானா?* 
*சந்தேகம் வந்தா...*
*பக்கத்துல 'ற' இருக்கா*
*அப்ப இங்க ரெண்டு சுழி 'ன்' தான் வரும்.*
*ஏன்னா அது "றன்னகரம்"*
*என்று புரிந்து கொள்ளலாம்.*

*இதே மாதிரித்தான் 'ந' கரம் என்பதை, "தந்நகரம்" னு சொல்லணும்*
*ஏன்னா இந்த 'ந்' *எழுத்தை அடுத்து* 
*வரக்கூடிய* *உயிர்மெய் 'த' மட்டுமே.* 
*(பந்து, வெந்தயம், மந்தை).*

*இந்த "ண", "ன" மற்றும் "ந" விளக்கம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்...*

*அருமையான விளக்கம்  இதுவரை பலபேருக்கு தெரியாமல் இருந்தது.* 
*தமிழறிவோம் இதை பலபேருக்கு பகிர்வோம்.*

*நன்றியுடன்:*
*மீனா-திருமருகல்*

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post