ஆசிரியர் பயிற்சிக்கு 4,000 பேர் விண்ணப்பம்


             ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு, நேற்று வரை, 4,000 மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். 
 
                    இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி டிப்ளமா படிப்பிற்கு, கடந்த, 14ம் தேதி முதல், விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. அரசு ஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் இடங்கள் உள்ளபோதும், வேலை வாய்ப்பு இல்லாத படிப்பாக, ஆசிரியர் பயிற்சி டிப்ளமா உள்ளது. இதனால், மாணவர்களிடம் ஆர்வம் இல்லை. நேற்று மாலை வரை, மாநிலம் முழுவதும், 4,000 விண்ணப்பம் விற்பனையானதாக, துறை வட்டாரம் தெரிவித்தது. கடைசி தேதியான, ஜூன், 2ம் தேதி வரை, மேலும், 500 விண்ணப்பம் விற்பனை ஆகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், 2,000க்கும் அதிகமாக பெறப்பட்டுள்ளதாகவும், துறை வட்டாரம் தெரிவித்தது. ஜூன் இறுதியில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கும்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post