ஆதார் அடையாள அட்டை திட்டத்துக்கு ரூ.1200 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.


இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் நாடு முழுவதும் செல்லக்கூடியஅடையாள அட்டை வழங்க கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆதார் திட்டத்தை 
கொண்டு வந்தது. ஆதார் அட்டைக்காக ஒருவரது கைரேகை மற்றும் கருவிழிகள் பதிவு செய்யப்பட்டன. 
இதற்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.குடிமகன்களின் சுதந்திரம் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் மத்தியில்  ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜ தலைமையில் புதிய அரசு அமைந்தது.இதனால் 
ஆதார் திட்டம் தொடருமா என கேள்வி எழுந்தது.இந்நிலையில் ஆதார் திட்டம்
தொடரும் என மத்திய அரசு அறிவித்தது. 

இதற்காக கடந்த பட்ஜெட்டியில் நிதியும் ஒதுக்கப்பட்டது.இந்நிலையில் ஆதார் திட்டம் எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்து கடந்த சனிக்கிழமை உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடிஆலோசனை நடத்தினார்.இதன்பின்னர் நேற்று அவரது  தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆதார் திட்டத்துக்காக  
ரூ.1200 கோடி நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.ஆதார் திட்டத்தின் கீழ் இது வரை நாடு முழுவதும் 67 கோடிபேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது

2015ம் ஆண்டுக்குள் 100 கோடிபேருக்கு அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக கருதப்படும் .பி.யில் மொத்தமுள்ள 20கோடி பேரில் 4.6 கோடிபேருக்கு மட்டுமே ஆதார் அட்டை கிடைத்துள்ளது. இதே போல் 10.38 கோடி மக்கள் தொகை கொண்ட பீகாரில் 1.4 கோடி பேருக்கு மட்டுமே ஆதார் 
எண் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள நிதி .பி,பீகார் போன்ற 
ஆதார் பின்தங்கிய மாநிலங்களில் பயன்படுத்தப்படும் என தெரிகிறது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post