ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருநெல்வேலி மற்றும் கோவைக்கு சிறப்பு ரயில்கள்

கோப்புப் படம்
ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருநெல்வேலி மற்றும் கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு நாளை (15-ம் தேதி) தொடங்குகிறது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை- திருநெல்வேலி, சென்னை கோவை இடையே சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி- சென்னை எழும்பூர் சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில் செப்டம்பர் 30, அக்டோபர் 6 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும்.
சென்னை எழும்பூர்- திருநெல் வேலி சிறப்பு ரயில் அக்டோபர் 5-ம் தேதி இரவு 8.20 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 10 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
மற்றொரு சிறப்பு ரயில் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து அக்டோபர் 6-ம் தேதி இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் பகல் 12.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். அக்டோபர் 7-ம் தேதி காலை 10 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் அன்று இரவு 11 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
கோவையில் இருந்து அக்டோபர் 1-ம் தேதி அதிகாலை 12.30 மணிக்கு புறப்படும் சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில் அன்று காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலை யத்தை சென்றடையும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத் தில் இருந்து அக்டோபர் 6-ம் தேதி காலை 10.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அன்று மாலை 6 மணிக்கு கோவையை சென்றடையும்.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 15-ம் தேதி தொடங்க உள்ளது.
பிரீமியம் சூப்பர் ஃபாஸ்ட்
சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 1-ம் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த நாள் காலை 7.15 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். இதற்கான முன்பதிவு செப்டம்பர் 16-ம் தேதி தொடங்குகிறது.
மற்றொரு சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து அக்டோபர் 5-ம் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7.15 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும். இதற்கான முன்பதிவு செப்டம்பர் 20-ம் தேதி தொடங்குகிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அக்டோபர் 1-ம் தேதி இரவு 9.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த நாள் காலை 5.10 மணிக்கு கோவையை சென்றடையும். இதற்கான முன் பதிவு செப்டம்பர் 16-ம் தேதி தொடங் குகிறது. கோவையில் இருந்து அக்டோபர் 5-ம் தேதி இரவு 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த நாள் காலை 5.45 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இதற்கான முன்பதிவு செப்டம்பர் 20-ம் தேதி தொடங்குகிறது.
இவ்வாறு தெற்கு ரயில்வே யின் செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post