ஆசிரியர் தகுதித் தேர்வு தடையாணையின் இறுதிப் பக்கம் பற்றிய சில முக்கிய கருத்துக்கள்:

 * மனுதாரர்கள் பிளஸ் 2, பட்டப்படிப்பு ,ஆசிரியர் பட்டயப்படிப்பு போன்றவற்றின் மதிப்பீட்டு முறைகள் காலத்திற்கேற்ப மாறிவருவதால் தற்போது அரசு கொண்டுவந்துள்ள வெய்டேஜ் முறையால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்...

*  தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் கலந்தாய்வுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.இப்பணி முழுமையாக முடிவடைந்து ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுவிட்டால் அவர்களது மனுக்கள் பயனற்றதாக போய்விடும். இத்தகைய சூழ்நிலையில் தடையாணை வழங்கப்படாவிட்டால் அவர்கள் மனரீதியாக புண்படும் சூழலுக்கும், இழப்புக்கும் ஆளாகும் நிலை ஏற்படும்.

* இச்சூழலில்,ஆசிரியர் தேர்வுவாரியம் கவுன்சிலிங்கை தொடர்ந்து நடத்த அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு பணியாணை வழங்கக்கூடாது எனவும், ஏற்கனவே பணியாணை வழங்கப்பட்டிருந்தால் அவர்களை பணியில் சேர அனுமதிக்கக்கூடாது எனவும் கூறி இடைக்கால தடைவிதிக்கப்படுகிறது... இந்த தடை இவ்வழக்கின் பிற ஆணைகள் வரும் வரை பொருந்தும்..

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post