மருத்துவத் துறையில் கதிர்வீச்சு கனிமங்கள் குறித்த தேசியக் கருத்தரங்கம்

மதுராந்தகத்தை அடுத்த சின்னகொளப்பாக்கத்தில் உள்ள கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில் மருத்துவத் துறையில் கதிர்வீச்சு கனிமங்களின் பங்களிப்பு என்ற தலைப்பிலான தேசியக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் உயிரித் தொழில்நுட்பத்துறை சார்பில் நடைபெற்ற கல்லூரி மேலாண்மை இயக்குநர் மீனாட்சி அண்ணாமலை தலைமை வகித்தார்.
கல்லூரியின் உயிரித் தொழில்நுட்பத்துறையின் தலைவர் பேராசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார். கல்லூரி ஆலோசகர் ரவிசந்திரன், கல்லூரி முதல்வர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் ஷீலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உதவிப் பேராசிரியர் மோகனசுந்தரம் நன்றிக் கூறினார்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post