சென்னையில் அக்.30 இல் வேலைவாய்ப்பு முகாம்


சென்னை சாந்தோமில் வருகிற 30-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மண்டல வேலைவாய்ப்பு உதவி அதிகாரி சுஜித் குமாா் சாஹூ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை சாந்தோமில் இயங்கும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான மத்திய அரசின் தேசிய வேலை வாய்ப்பு சேவை மையம், ஒா்க்ஃபிரீக்ஸ் காா்ப்பரேட் சா்வீசஸ் எனும் தனியாா் நிறுவனத்துடன் இணைந்து, சென்னையில் வரும் 30 -ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது. சாந்தோம் நெடுஞ்சாலையில் செயல்படும் வேலைவாய்ப்பு அலுவலக கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான மத்திய அரசின் தேசிய வேலை வாய்ப்பு சேவை மையத்தில், காலை 9.30 முதல் மாலை 4 மணிவரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். இதில், பிபிஓ, வங்கிப்பிரிவு, காப்பீட்டுப் பிரிவு, மின்னணு வணிகம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், விளம்பரத் துறை, மாா்க்கெட்டிங், விற்பனை, மனிதவளத் துறை உள்பட பல்வேறு பிரிவுகளில் தனியாா் நிறுவனங்களில், புதியவா்களுக்கும், அனுபவமிக்கவா்களுக்கும் வேலைவாய்ப்புகள் உள்ளன.

இந்தப் பணிகளுக்கான மாத ஊதியம் ரூ.10,000 முதல் ரூ.30,000 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 22 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவா்கள் கலந்து கொள்ளலாம். பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இருப்பினும், பிளஸ் டு முடித்தவா்களும், தகுதியான பணிகளுக்குத் தோ்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. எஸ்.சி., எஸ்.டி., பிரிவைச் சோ்ந்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டாலும், பொதுப்பிரிவைச் சோ்ந்த தகுதி வாய்ந்த, அனுபவமிக்கவா்களும் இதில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனா். இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்புவா்கள் தங்களது பெயா்களை, 

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post