செம மழை தான், ஆனாலும் ஸ்கூல் லீவு கிடையாது- சென்னை ஆட்சியர்!

செம மழை தான், ஆனாலும் ஸ்கூல் லீவு கிடையாது- சென்னை ஆட்சியர்!

சென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

செம மழை தான், ஆனாலும் ஸ்கூல் லீவு கிடையாது- சென்னை ஆட்சியர்!
ஹைலைட்ஸ்
  • மாணவ, மாணவிகளே இன்று பள்ளி வேலை நாள்
  • மறக்காம பள்ளிக்கூடம் போயிடுங்க
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்றே தொடங்கிவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. எனவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில் 48 மணி நேரத்திற்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என்று கூறியது. வானிலை மையத்தின் கூற்றிற்கேற்ப நேற்று மாலை முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

செம காட்டு காட்டும் பருவமழை- தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் நீர்மட்டம்!

இன்று அதிகாலை முதல் கனமழை வெளுத்து வாங்கியதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் காலையில் வேலைக்கு செல்ல புறப்பட்ட வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

அதேசமயம் வீட்டிலிருந்து மாணவ, மாணவிகளும் வெளியே வர சிரமப்பட்டு கொண்டிருந்தனர். இதற்கிடையில் தொடர் மழை காரணமாக, சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்று மாணவ, மாணவிகளிடம் எதிர்பார்ப்பு கிளம்பியது.

எங்க பாத்தாலும் தண்ணீர்; அதிகாலை முதல் சென்னையை புரட்டி எடுத்து வரும் மழை!

அனைவரும் தொலைக்காட்சி முன்பு காலை முதல் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் சென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது மாணவ, மாணவிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இருப்பினும் ஒருசில மாணவர்களை தவிர, மற்றவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு புறப்பட தயாராகினர். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை கவனத்துடன் அழைத்து சென்று, பள்ளிகளில் விட்டு வருவதை காண முடிந்தது.

காலையில் திண்ணைப் பிரச்சாரம்... மாலையில் திரையரங்கம்... அசதி தீர அசுரன் பார்க்கும் மு.க.ஸ்டாலின்

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post