பொங்கல் பண்டிகையன்று கேட் 2013 தேர்வு முடிவுகள்?

இந்தூர்: கேட் 2013 தேர்வு முடிவுகள், ஜனவரி 14ம் தேதி, பொங்கல் பண்டிகையன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேட் தேர்வு முடிவுகளின் மூலம், ஐ.ஐ.எம்.,கள் போன்ற முதல்நிலை வணிகப் பள்ளிகளில் மட்டுமல்லாது, நாடெங்கிலுமுள்ள இரண்டாம் நிலை வணிகப் பள்ளிகளிலும் இடம் பெறலாம் என்பது நாம் அறிந்ததே.
கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் 16 முதல் நவம்பர் 11 வரை கேட் தேர்வு நடத்தப்பட்து. நாடெங்கிலும் 40 நகரங்களிலுள்ள 76 தேர்வு மையங்களில், மொத்தம் 1 லட்சத்து 94 ஆயிரத்து 516 பேர் இத்தேர்வை எழுதினர்.
கேட் தேர்வில் வெற்றிபெற்றாலும், தாங்கள் விரும்பிய வணிகப் பள்ளியில் சேர்க்கைப் பெற, நேர்முகத் தேர்வு மற்றும் குழு கலந்தாய்வு போன்ற அம்சங்களையும் மாணவர்கள் வெற்றிகொள்ள வேண்டியுள்ளது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post