ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு (2) முடிவு வெளியீடு

டில்லி: கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி, UPSC நடத்திய Combined Defence Services Examination (II) முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மொத்தமாக, 8,984 பேர் இத்தேர்வின் மூலமாக, அடுத்த கட்ட நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றிருக்கிறார்கள். தேர்வு முடிவுகளை www.upsc.gov.in இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.
தகுதிபெற்ற நபர்கள், பின்வரும் அகடமிகளில் ஏதேனும் ஒன்றில் தகுதிபெற நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அவை,
* இந்தியன் மிலிட்டரி அகடமி - டேராடூன்
* இந்தியன் நேவல் அகடமி - கேரளா
* ஏர் போர்ஸ் அகடமி - ஐதராபாத்
* ஆபிசர்ஸ் டிரெய்னிங் அகடமி - சென்னை
நேர்முகத் தேர்வின் இரண்டாம் சுற்றில் பங்கேற்பவர்கள், தங்களின் கல்வித்தகுதி, வயது மற்றும் NCC பயிற்சி ஆகியவற்றை நிரூபிப்பதற்கான அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், அவற்றின் Attest செய்யப்பட்ட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post