ஆசிரியர்களின் கட்டாய டியூஷன் - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

சென்னை: மாணவர்களிடம் கட்டணம் வசூலித்து, கட்டாய டியூஷன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில், மாணவர்களிடம் கட்டணம் வசூலித்து, கட்டாய டியூஷன் எடுக்கும் வழக்கம், ஆசிரியர்களிடையே பரவலாக உள்ளது.
இதனால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. டியூஷன் சேர முடியாத மாணவர்கள், ஒதுக்கப்படும் நிலை உருவாகிறது மற்றும் ஆசிரியர்களின் பணி அக்கறையும் குறைகிறது. தங்களிடம் டியூஷன் படிக்கும் மாணவர்களிடம் மட்டுமே அவர்கள் தனி அக்கறை காட்டுகின்றனர். பிற மாணவர்களை கண்டுகொள்ளாமல் விடும் சூழல் ஏற்படுகிறது.
எனவே, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இத்தகைய நடவடிக்கைகளை ஆசிரியர்கள் கைவிட வேண்டும். இல்லையேல், அத்தகையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post