குரூப்-4 பணியிட நியமனம்: நாளை 6-ஆம் கட்ட கலந்தாய்வு

குரூப்-4 பணியிட நியமனங்களுக்கான 6-ஆம் கட்ட கலந்தாய்வு புதன்கிழமை (ஜனவரி 22) நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்வாணையம் வெளியிட்ட செய்தி:
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பணிகளான இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 7-7-2012 அன்று நடைபெற்றது.
இதில் தகுதிபெற்றவர்கள் காலிப்பணியிடங்களில் நிரப்பப்பட்டு வருகின்றனர்.
இப்போது மீதமுள்ள 88 காலிப்பணியிடங்களுக்கான 6-ஆம் கட்ட கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, சென்னை பிராட்வே பஸ்நிலையம் அருகில் வ.உ.சி. நகர் பிரசேர் பாலச்சாலையில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்கத் தகுதியானவர்களின் விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் பங்கேற்போர் தங்களின் அசல் சான்றிதழ்கள் மற்றும் சான்றொப்பம் பெற்ற நகல் சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post