பிசியோதெரபிஸ்ட் காலி பணியிடம் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்படுகிறது

சென்னை: பிசியோதெரபிஸ்ட் காலி பணியிடங்கள் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்படுகிறது. இதற்கான பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கிண்டி தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம் துணை இயக்குனர் விஜயகுமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: மருத்துவ தேர்வு வாரியம் 34 பிசியோதெரபிஸ்ட் பணிக்கு  வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெறப்பட்டு மாநில பதிவு மூப்பு அடிப்படையில் மனுதாரர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளனர். இப்பணிகாலி பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் உத்தேச பதிவு மூப்பு ஆகிய விவரங்கள் chennai.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கல்வி தகுதியும்,  பதிவு மூப்பும் உள்ள தகுதியுள்ள மனுதாரர்களது விவரம் சென்னை கிண்டியில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மதுரை அலுவலக தகவல் பலகையில் ஓட்டப்பட்டுள்ளது. அதில், இருந்து தகுதியுள்ள பதிவுதாரர்கள் தங்களது பரிந்துரை விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

இதில் விடுபடல் ஏதேனும் இருப்பின் வருகிற 10ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் முறையீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு விஜயகுமார் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post