குரூப் 2 தேர்வு: 1,262 பணியிடங்களுக்கு வரும் 10 முதல் கலந்தாய்வு.


குரூப் 2 தொகுதியில் நேர்காணல் அல்லாத ஆயிரத்து 262 பணியிடங்களுக்கு கலந்தாய்வு வரும் 10 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:
தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் உள்பட குரூப் 2 தொகுதியில் அடங்கியுள்ள பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி நடைபெற்றது. அதில், நேர்காணல் அல்லாத ஆயிரத்து 262 பணியிடங்களுக்கான கலந்தாய்வு வரும் 10- ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இதற்காக எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பதிவெண்கள், பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அரசுப் பணியாளர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி) அலுவலகத்தில் இந்தக் கலந்தாய்வு வரும் 18 ஆம் தேதி வரைநடைபெறுகிறது. என அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post