தமிழ்நாடு ஓய்வூதியதாரர்கள் - அறிவிப்பு மற்றும் படிவங்கள

அறிவிப்பு மற்றும் படிவங்கள
1. அறிவிப்பு :
ஓய்வூதியதாரர்கள் நேர்காணல் ஏப்ரல் 2013 முதல் ஜுன் 2013 வரை அனைத்து அரசு வேலை நாட்களில் நடைபெறும்.   நேர்காணலுக்கு வர இயலாத ஓய்வூதியதாரர்கள் கீழ் காணும் படிவத்தில் ஆயுள் சான்று அளிக்கலாம்.
2. படிவங்கள் :
4. சென்னை ஓய்வூதியம் வழங்கும் அலுவலக செய்திக் குறிப்பு:
கருவூல விதிகளின்படி கருவூலத்துறை மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் ஆண்டுதோறும் (ஏப்ரல் முதல் ஜீன் வரை) ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில்நேர்காணலுக்கு வேலை நாளில் வருகை தரவேண்டும். அவ்வாறு வரும்போது ஓய்வூதியப் புத்தகம் / வங்கி பற்று - வரவு புத்தகம் / வருமான வரி கணக்கு எண் மற்றும் ஒரு புகைப்படம் ( Passport size photo) ஆகியவற்றையும் கொண்டு வரவேண்டும். குடும்ப ஓய்வூதியதாரர்கள் மறுமணம் புரியா சான்றும் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நேரில் வரவியலாத ஓய்வூதியதாரர்கள் உரிய படிவத்தில் வாழ்வுச் சான்றினை
ஓய்வூதிய வங்கிக் கணக்கு உள்ள கிளை மேலாளர் (அல்லது)
அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர்கள் (அல்லது)
வட்டாட்சியர் / துணை வட்டாட்சியர் அல்லது வருவாய் ஆய்வாளர்
ஆகியோரிடம் பெற்று அனுப்ப வேண்டும் சான்றுகளுக்கான மாதிரிப் படிவத்தை(www.tn.gov.in/karuvoolam) இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வாழ்வுச் சான்றிதழுடன் ஓய்வூதியதாரரது ஓய்வூதியப் புத்தகம்ஒரு புகைப்படம் (Passport Size Photo) மற்றும் வங்கி பற்று - வரவு புத்தகத்தின் முதல் பக்க நகல்,குடும்ப ஓய்வூதியதாரர்கள் மறுமணம் புரியா சான்று ஆகியவற்றையும் அளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியதாரர்கள் அந்நாட்டிலுள்ள மாஜிஸ்டிரேட்நோட்டரிவங்கி மேலாளர் அல்லது இந்திய தூதரக அதிகாரியிடம் வாழ்வுச்சான்று பெற்றுசம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். வருமானவரி செலுத்த வேண்டியவர்கள் நடப்பு நிதியாண்டுக்கான தோராயமான வருமானவரி அறிக்கையினைஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். ஓய்வூதியம் வழங்கும் பணி கணினிமயமாக்கப்படுவதால்தகவல் தொடர்பிற்கும்வருமான வரி பிடித்தம் குறித்த விபரங்களை தாக்கல் செய்வதற்கும் வசதியாக தற்போதைய இருப்பிட முகவரிதொலைபேசி / கைபேசி எண்மின்னஞ்சல் முகவரிவருமான வரி கணக்கு எண் ஆகிய விபரங்களையும் அளிக்குமாறு கோரப்படுகிறது.
ஓய்வூதியதாரர்கள் ஏப்ரல் முதல் ஜீன் வரை நேர்காணலுக்கு வரத்தவறினாலோ அல்லது சான்றொப்பம் செய்யப்பட்ட வாழ்வுச் சான்றினை அனுப்பத் தவறினாலோ ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் ஆகஸ்டு மாதம் முதல் நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கலாகிறது.
குறிப்பு - பொதுத் துறை வங்கிகள் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களுக்கு வருடாந்திர நேர்காணல் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வங்கிகளில் மேற்கொள்ளப்படுவதால் அத்தகைய ஓய்வூதியர்கள்ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில் 01.04.2013 முதல் தற்போது நடைபெற்றுவரும் வருடாந்திர நேர் காணலுக்கு வர வேண்டியதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

                            ஓய்வூதியம் வழங்கும் அலுவலர்

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post