அடுத்த 2 ஆண்டுகளில் புதிதாக 5 லட்சம் பணிகள்!

அடுத்த 2 ஆண்டுகளில், சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பணி வாய்ப்புகள், இந்தியாவில் உருவாக்கப்படும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: புதிதாக உருவாக்கப்படும் 5 லட்சம் பணிகளில், பெரும்பாலனவை, டில்லி, மும்பை மற்றும் பெங்களூர் நகரங்களில் இருக்கும்.
இதற்கு தயாராகும் வகையில், 70 முதல் 80 மில்லியன் சதுர அடி இடவசதி, 2015ம் ஆண்டில் பயன்படுத்தத்தக்க வகையில், தயாராக இருக்கும். அவற்றில், அதிகமானவை, ஐ.டி., தொடர்பான துறைகளுக்கானது.
ஐ.டி., மற்றும் அதன் தொடர்புடைய துறைகள் தவிர, பேங்கிங், பைனான்சியல் சர்வீஸ், இன்சூரன்ஸ், பார்மசூடிகல், இன்ஜினியரிங் மற்றும் உற்பத்தி மற்றும் தொலை தொடர்பு போன்ற துறைகளிலும் பணி வாய்ப்புகள் இருக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post