“இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அரசு வெறுப்படையச் செய்து வருகிறது” - நீதிபதிகள்


          ஐ.ஏ.எஸ். பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு உட்பட அனைத்து அரசுப் பணிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்


         ஐ..எஸ்பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு உட்பட அனைத்து அரசுப்பணிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றுஉச்ச நீதிமன்றம் கூறியுள்ளதுதலைமை நீதிபதி ஆர்.எம்.லோதாதலைமையிலான நீதிபதிகள் அமர்வு, 1995-ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள்சட்டம் தாக்கல் செய்யப்பட்டும் 19 ஆண்டுகளாக  அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகள் கிடைக்கவில்லை என்று மத்திய அரசைச் சாடியுள்ளது.

         மத்திய அரசுக்கு ஆதரவாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பின்கிஆனந்த்நீதிபதிகளிடத்தில் கூறும்போதுகுரூப்  மற்றும் குரூப் பி அதிகாரிகள்பணிப் பிரிவில் பதவி உயர்வு அளிக்க முடியாதுஏனெனில் அது நியமனம் அல்லஎன்பதினால் என்று வாதாடினார்.

         நியமனம் என்பது பரந்துபட்ட ஒரு கருத்தாக்கம்ஆனால் மத்திய அரசு இதற்குகுறுகலான விளக்கம் அளிக்கிறது என்று நீதிபதிகள் குழுவினர் அவருக்குபதிலுரைத்தனர்.

          எந்தக் காரணத்திற்காக நாடாளுமன்றத்தில் இதற்குரிய மசோதா தாக்கல்செய்யப்பட்டதோ அதன் நோக்கம் நிறைவேறவில்லை என்று கூறிய நீதிபதிகள், “இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அரசு வெறுப்படையச் செய்து வருகிறது” என்றுசாடினர்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post