தகுதியின் அடிப்படையிலேயே ஊழியர்களை பணியமர்த்துங்கள்: அமைச்சகங்களுக்கு மோடி உத்தரவு

மத்திய அரசின் அமைச்சகங்களுக்கு தேவையான ஊழியர்களை பணியமர்த்தும் போது தகுதியின் அடிப்படையில் நியமனம் செய்யவேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பரிந்துரையின் பேரில் தகுதியற்ற நபர்கள் எல்லாம் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதனாலேயே அலுவலக நிர்வாகம் பெரும் சிரமத்தை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது பரிந்துரைக்கு முக்கியத்துவம் தராமல் திறமையுள்ள, தகுதியான நபர்களை மட்டும் பணியமர்த்துமாறு அமைச்சகங்களுக்கு மோடி கூறியுள்ளார்.
வரும் ஐந்து ஆண்டுகளுக்கு இதே நடைமுறையை அனைத்து அமைச்சகங்களும் பின்பற்றவேண்டும் என்றும் மோடி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அரசு நிர்வாகங்களில் முறைகேடு நடைபெறுவது தடுக்கப்பட வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post