முதுநிலை யோகா படிப்பு: விண்ணப்பிக்கும் அவகாசம் நாளையுடன் நிறைவு


முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் வெள்ளிக்கிழமையுடன் (அக்.18) நிறைவடைகிறது.
இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை வெளியிட்ட அறிவிப்பு: அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு பாரம்பரிய மருத்துவமனை வளாகத்தில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் இளநிலை படிப்புகளுக்கு 60 இடங்கள் உள்ளன. அதேபோன்று முதுநிலை படிப்புகளுக்கும் சில இடங்கள் உள்ளன.
இந்நிலையில், முதுநிலை படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த 7-ஆம் தேதி முதல் தொடங்கியது. இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வரும் 18-ஆம் தேதி வரை மட்டுமே விண்ணப்பங்களை ஆன்லைன் வாயிலாக பதிவிறக்கம் செய்ய முடியும். அதேபோன்று, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அன்றைய தினம் மாலை 5.30 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். முதுநிலை யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வு வரும் 20-ஆம் தேதி நடைபெறுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Post a Comment

    வாசகர்களுக்கு வணக்கம்,


    தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

    - அன்புடன் QUESTIONSCHOOL

    Previous Post Next Post