தமிழ் மொழி அழகானது:பிரதமர் மோடி


புதுடில்லி: தமிழ்மொழி அழகானது. தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

மாமல்லபுரம் பெருமைகள் குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கவிதை பதிவிட்டு இருந்தார். இதற்கு திரை உலகை சேர்ந்தவர்கள் வரவேற்பு தெரிவித்ததுடன் பிரதமரை பாராட்டினர். இதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:

தமிழ்மொழி அழகானது. தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் . சிறந்த கலாசாரத்தை கொண்ட தமிழ் மொழியில் எனது எண்ணங்களை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி. இயற்கையை மதித்து நடப்பது நமது நெறிமுறை . இயற்கை தெய்வீகத்ததையும், மகத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது.இவ்வாறு பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post