மருத்துவ தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு


மருத்துவ பல்கலைக்கழக தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மாணவர்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பு:2020-ம் ஆண்டு பிப்ரவரியில் மருத்துவ பல்கலைக்கழக தேர்வு நடக்கவுள்ளது. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது குறித்த அட்டவணை பல்கலை. இணையதளத்தில் கடந்த 3-ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் உள்ளாட்சி தேர்தல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால், தேர்வுக்கு அபராத தொகை இல்லாமல் விண்ணப்பம் அளிக்க ஜனவரி 7-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தேர்வு குறித்து மேலும்கூடுதல் விவரங்களை www.tnmgrmu.ac.in என்ற பல்கலைக்கழக இணைய தளத்தில் காணலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post