~ முன்னறிவிப்புடன் போராட்டம் ~

முன்னறிவிப்பு இன்றி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற இயக்குனரின் உத்தரவை எதிர்த்து

"முன்னறிவிப்புடன்" 


வருகிற 10.9.14 அன்று மாலை 5 மணிக்கு தமிழகம் முழுவதும் அனைத்து AEEO அலுவலகம் முன்பும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது.

அனைத்து ஆசிரியர்களும் பெருந்திரளாக கலந்துகொள்ளவும்-TNPTF

***********************

அரிசியில் புழு, பூச்சிகள் இருந்தால் அதை பொறுக்கி விட்டெறியாமல் சகித்துக்கொண்டு அதையே பொங்கித்திங்கவேண்டும் என்பது போல் உள்ளது இந்த உத்தரவு.

சுத்தமான அரிசியை தர முயற்சி எடுக்காமல்...

புழு, பூச்சிகள் என்ன..., பெருச்சாலிகளே அட்டகாசம் செய்யும் அளவிற்கு வேடிக்கை பார்த்துவிட்டு... உத்தரவு வேறு..

முறையான அனுமதி பெற்ற பின் புழு,பூச்சிகளையும், 
பணம் தின்னி பெருச்சாலிகளையும் விரட்டிவிட்டு பிறகு பொங்கித்திங்கும் வரை பசி தாங்குமா..?

இல்லை..., உயிர் தான் தங்குமா...?

தாமதமாக கிடைக்கும் நீதி
மறுக்கப்பட்ட நீதி
(அநீதியை விடக் கொடுமையானது) என்பதை கல்வித்துறைக்கு உணர்த்துவோம் வாரீர்..

நெஞ்சில் மூண்ட நெருப்புக்கு சமரசம் ஏதும் கிடையாது.
குண்டாந்தடியால் அடித்தாலும்,குண்டுகள் நெஞ்சைப் பிளந்தாலும் அடக்குமுறைக்கு அடிபணியோம்.

(வளைந்து கொடு,
உடையும் நிலை வந்தால்...
நிமிர்ந்து விடு)

- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post